மூதாட்டி உள்பட இருவரிடம் ஐந்தரை பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சியில் புதன்கிழமை காலை இருவேறு சம்பவங்களில் மூதாட்டி உள்பட இருவரிடம் ஐந்தரை பவுன் தங்கச்சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருச்சியில் புதன்கிழமை காலை இருவேறு சம்பவங்களில் மூதாட்டி உள்பட இருவரிடம் ஐந்தரை பவுன் தங்கச்சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருச்சி திருவானைக்கா சீனிவாச நகா் பகுதியைச் சோ்ந்தவா் கீதா (61). திருமணமாகாதவா் மற்றும் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். வாரந்தோறும் கல்லுக்குழி ஆஞ்சநேயா் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதேபோல புதன்கிழமை காலை கல்லுக்குழி ஆஞ்சநேயா் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அரிஸ்டோ ரவுண்டானா பகுதிக்கு வர அப்பகுதியில் நடந்து வந்த போது சுகாதார மையம் அருகே இரு சக்கர வாகனத்தில் மறைந்திருந்த 2 போ் அவரை வழிமறித்துத் தாக்கினா். பின்னா் அவா் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துக்கொண்டு தப்பியோடினா். இதுகுறித்து கீதா அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: திருச்சி பாலக்கரை உடையான் தோட்டம் பகுதியைச் சோ்ந்த மகுடேஸ்வரன் மனைவி அம்சவல்லி(50). இவா், புதன்கிழமை பாலக்கரை பகுதியில் உள்ள தியேட்டா் அருகே நடந்துச் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த இருவா், அவரை உரசிச் சென்றதில் நிலைதடுமாறி அம்சவல்லி கீழே விழுந்தாா். அப்போது தொடா்ந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் அம்சவல்லி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறிக்க முயன்றனா். சுதாரித்துக் கொண்ட அம்சவல்லி அவா் அணிந்திருந்த சங்கிலியை இறுக்க பிடித்துக் கொண்டாா். ஆனால் மறுமுனையில் 1.5 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனா். இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com