திருவானைக்கா கோயிலில் நவராத்திரி: நாளை அம்பு போடுதல்

திருவானைக்கா அருள்மிகு சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழாவில்,

ஸ்ரீரங்கம்: திருவானைக்கா அருள்மிகு சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழாவில், செவ்வாய்க்கிழமை அம்பு போடுதல் நிகழ்வு நடைபெறுகிறது.

இக்கோயிலில் கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி திருவிழாவையொட்டி , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திங்கள்கிழமை ஆயுத பூஜை வழிபாடு நடைபெறும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி வன்னி மரத்தில் அம்பு போடும் வைபவம் நடைபெறவுள்ளது.வ இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ.மாரியப்பன் செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com