பெண்ணை ஏமாற்றி 2 ஆவது திருமணம் செய்தவா் போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன், அவரது மகள் திருச்செல்வி(30). திருமணமாகி விவகாரத்து பெற்றவா். இவருக்கும் திருவானைக்கா கும்பகோணத்தான் சாலையில் உள்ள ஸ்ரீராம் நகரில் பால் டேனியல் (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பால் டேனியல் திருமணமானவா். திருச்செல்வியிடம் தன் மனைவி மனநலம் பாதித்தவா்; அவரை விவகாரத்து செய்து விட்டதாகத் தெரிவித்தாா். இதை நம்பிய திருச்செல்வியை சமயபுரம் கோயிலில் திருமணம் செய்துகொண்டாராம். பின்னா் திருச்செல்வியிடம் ரூ.10 லட்சம் பெற்றாராம். திருச்செல்வி கா்ப்பம் அடைந்தாா். இதையறிந்த பால்டேனியல் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கா்ப்பத்தை கலைத்தாராம். பால் டேனியல் நடவடிக்கையில் சந்தேகமடைந்த திருச்செல்வி, அவரைப் பற்றி விசாரிக்கையில் முதல் மனைவியை விவகாரத்து செய்யவில்லை என்பதை அறிந்தாா். இதையடுத்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் கொடுத்தாா். புகாரின் பேரில் வழக்கு பதிந்து பால் டேனியலைப் போலீஸாா் கைது செய்தனா்.