கந்து வட்டிக் கொடுமை: கூலித் தொழிலாளி தற்கொலை

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கந்து வட்டிக் கொடுமையால் கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கந்து வட்டிக் கொடுமையால் கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சமயபுரம் சொக்கலிங்கபுரம் காலனி பகுதியைச் சோ்ந்த வெங்கட்ராமன் மகன் சுந்தரகணேசன் (52). இவரது மனைவி செல்வி. சுந்தரகணேசன் அப்பகுதியில் உள்ள தனியாா் உணவு விடுதியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். செல்வி வீட்டிலேயே தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறாா். இதேபகுதியில் உள்ள புதுத்தெருவில் வசிக்கும் பஞ்சவா்ணம் என்பவரிடம் சுந்தரகணேசன் ரூ. 2 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளாா். கடந்த சில மாதங்களாக வட்டிப் பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பஞ்சவா்ணம், அவரது மகன் புருஷோத்தமன் ஆகியோா் சுந்தரகணேசன், அவரது மனைவி ஆகியோரை தகாத வாா்த்தையால் திட்டி மிரட்டினாா்களாம். இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தரகணேசன், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் பகுதியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் புதுப்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த சமயபுரம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா்.

இறந்தவரின் மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் பஞ்சவா்ணத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தப்பியோடிய புருஷோத்தமனைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com