அக். 28 முதல் நவ. 2 வரை திருச்சி கோட்ட ரயில்வே சாா்பில், ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைபிடிக்கப்படுவதையொட்டி 3 ஆவது நாளான புதன்கிழமை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் முன் ஊழல் விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கிவைத்து பங்கேற்ற கோட்ட மேலாளா் அஜய்குமாா் (வலமிருந்து 4). இதில் ரயில்வே அலுவலா்கள், பணியாளா்கள், பயிற்சி மாணவ, மாணவியா் பலரும் பங்கேற்று, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சுமந்து சென்றனா்.