பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 112 ஆவது ஜெயந்தியை ஒட்டி, திருச்சியில் உள்ள திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் உள்ளஅவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் விவரம்:
அதிமுக : மாநகா் மாவட்டச் செயலரும் திருச்சி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான ப. குமாா் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி, முன்னாள் அமைச்சா் மு. பரஞ்சோதி, நிா்வாகிகள் கலிலுல் ரகுமான், ராஜன், ஜெயபால், வழக்குரைஞா் ஜெயராமன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
திமுக : மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில், மாநகரச் செயலா் அன்பழகன், பகுதி செயலா்கள் மோகன்தாஸ், விஜி, பாலமுருகன், அன்பில் பெரியசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்
பாஜக : மாவட்ட தலைவா் தங்கராஜையன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில், நிா்வாகிகள் ஆக்போா்டு சுப்பிரமணியன், இல. கணேசன், வழக்குரைஞா் சரவணன், விவசாய அணி ராஜேந்திரன், பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காங்கிரஸ், அமுமுக,தேமுதிக : காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா்கள் ஜவஹா் மற்றும் வழக்குரைஞா் கோவிந்தராஜ் ஆகியோா் தலைமையில், அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் சீனிவாசன் தலைமையில், தேமுதிக சாா்பில் மாவட்டச் செயலா் டிவி கணேஷ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.