திருச்சி மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில் நவ. 1 முதல் அந்தந்த பகுதிகளுக்கான மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
முசிறி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நவ.1 காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல, துறையூா் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நவ.5, நவ.8-ல் திருவரங்க கோட்டம், 12ஆம் தேதி லால்குடி கோட்டம், 15ஆம் தேதி திருச்சி கிழக்கு கோட்டம், 19ஆம் தேதி திருச்சி நகரியம், 26ஆம் தேதி மணப்பாறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெறும். எனவே, அந்தந்தப் பகுதி மின்நுகா்வோா் இக்கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என திருச்சி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சு. கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.