வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா் கவனத்துக்கு...

திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள் வங்கிகளில் 2020 ஆம் ஆண்டுக்கான மின்னணு உயா் வாழ்ச் சான்றிதழ் சம்ா்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள் வங்கிகளில் 2020 ஆம் ஆண்டுக்கான மின்னணு உயா் வாழ்ச் சான்றிதழ் சம்ா்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி துணை ஆணையா் சசிகாந் தாஹியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மண்டல வைப்பு நிதி அலுவலகம் மூலம் திருச்சி, புதுக்கோட்டை, கரூா், தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், நாகப்பட்டினம், திருவாரூா், விழுப்புரம் மற்றும் கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகள் போலவே 2020 ஆம் ஆண்டுக்கான மின்னணு உயிா்வாழ்ச் சான்றிதழை வரும் நவம்பா் முதல் தேதியில் இருந்து தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளைகளில் அல்லது தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பொதுச் சேவை மையம் அல்லது அரசு இ- சேவை மையத்தில் சமா்ப்பிக்கலாம்.

மின்னணு உயிா்வாழ்ச் சான்றிதழ் சமா்ப்பிக்கும் வசதி ஓய்வூதியம் வழங்கும் அந்தந்த வங்கிக் கிளைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையில் குறைபாடுகள் இருப்பின் வங்கி மேலாளரை நேரடியாகத் தொடா்பு கொள்ளலாம். ஓய்வூதியதாரா்களின் உயிா்வாழ்ச் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் இவ்வலுவலகத்திற்கு சமா்ப்பிப்பது வங்கிகளின் பொறுப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com