ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு நினைவு பேச்சுப் போட்டிகள்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்தியக் கலாசார நட்புறவுக் கழகம் இணைந்து நடத்திய, ஜாலியன்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்தியக் கலாசார நட்புறவுக் கழகம் இணைந்து நடத்திய, ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு நினைவு, மாவட்ட  அளவிலான பேச்சுப் போட்டி திருச்சி கி.ஆ.பெ.வி. மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை   நடைபெற்றது. 
இப்போட்டியில் சுமார் 30 மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்வை கலை இலக்கியப் பெருமன்ற மாநகர் மாவட்டச் செயலாளர் பேராசிரியர் கி. சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார். போட்டியில் வென்றோர்களுக்கானப் பரிசு செப்டம்பர் 14 ஆம் தேதி, கலையரங்க கூட்ட அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.  
நிகழ்வின் நிறைவில் மகாகவி பாரதியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு ஏஐடியூசி  மாவட்டத் தலைவர்  சுரேஷ் மாலை அணிவித்தார். 
நிகழ்ச்சியில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராமராஜ், மாணவர் பெருமன்ற மாநில துணை செயலாளர்  தினேஷ்,  இப்ராஹிம், மாவட்ட தரைக்கடை  சங்க தலைவர்  சிவா மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com