இந்தியா 2020-இல் வல்லசராக வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவில்பட்டியிலிருந்து புது தில்லிக்கு திரைப்பட உதவி இயக்குநர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் திரைப்பட உதவி இயக்குநர் ராஜா பரணிதரன்(43). இவர், இந்தியா வல்லரசாக வலியுறுத்தி கோவில்பட்டியிலிருந்து புதுதில்லி வரையிலான தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை கடந்த ஜூலை 29-இல் தொடங்கியவர் புதன்கிழமை இரவு மணப்பாறை வந்தடைந்தார். அவருக்கு ரோட்டரி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அவர் கூறுகையில், அக். 15-ஆம் தேதி புது தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து மருத்துவர்களின் வாகனங்களுக்கு சைரன், வீட்டிற்கு இரண்டு மரம் வளர்ப்போருக்கு வீட்டு வரியில் 10 சதவீதம் தள்ளுபடி என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்போவதாகக் கூறினார்.