திருச்சியில் நடைபெற்ற மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.
சென்னை, அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு கழகம் சார்பில், மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான 14ஆவது கிரிக்கெட் போட்டி திருச்சி, சிறுகனூர், எம்.ஏ.எம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் திருச்சி பொறியியல் கல்லூரி மைதானங்களில் நடைபெற்றன. மொத்தம் 19 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இப் போட்டியின் இறுதிபோட்டியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய திருச்சி, இருங்களூர் எஸ்.ஆர்.எம். டி.ஆர்.பி. பொறியியல் கல்லூரி 20 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து இரண்டாமிடம் பிடித்தது.
மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில், தொழுதூர், டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதனை எதிர்த்து விளையாடிய கொணலை, திருச்சி பொறியியல் கல்லூரி அணி 20 ஓவர்களில் 98 ரன்களை எடுத்து தோல்வியுற்றது.