சாலையை சீரமைக்கக்கோரி மக்கள் மறியல்

ஆலங்குடி அருகேயுள்ள கடுக்காகாட்டில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
agd25road_2509chn_21_4
agd25road_2509chn_21_4

ஆலங்குடி அருகேயுள்ள கடுக்காகாட்டில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கடுக்காக்காடு ஆதிதிராவிடா் தெருவில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றற சாலையாக மாறியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கறறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையாம்.

இதனால், அப்பகுதி மக்கள் சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி கடுக்காகாடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்றற வடகாடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்ட மக்களை கலைந்துபோகச்செய்தனா். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com