திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது.
மாவட்டத்திலுள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த வேலை வழங்குவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து , தங்களுக்குத் தேவையான ஆள்களை தேர்வு செய்வதற்கான முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ கல்வித் தகுதி உடையவர்கள் முகாமில் பங்கேற்கலாம். தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும். முகாம் மூலம் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெறுவோரது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. அவர்களது பதிவு மூப்பு விவரங்களும் அப்படியே தொடரும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.