சொத்துத் தகராறில் தாக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

மருங்காபுரி அருகே, சொத்துத் தகராறில் தாக்கப்பட்ட முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

மருங்காபுரி அருகே, சொத்துத் தகராறில் தாக்கப்பட்ட முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மருங்காபுரி ஒன்றியம், கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னக்கண்ணு(64). சொத்து பிரச்னை தொடர்பாக இவருக்கும், அண்ணன் பெருமாளின் மகள் கோபாலகிருஷ்ணனுக்கும் (39) இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கடந்த சில நாள்களாக மழை பெய்ததால், சின்னக்கண்ணு நிலத்தில் சோளம் விதைத்ததால், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது.
இதில் தனது சித்தப்பா சின்னக்கண்ணுவை கோபாலகிருஷ்ணன் அடிவயிற்றில் உதைத்து தாக்கியுள்ளார். இதில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட முதலில் மணப்பாறை தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சிமகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை சின்னக்கண்ணு உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீஸார் வழக்குப்பதிந்து, கோபாலகிருஷ்ணனைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com