திருச்சி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.
திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராக டி.என்.டி.நடேசன், துணைத் தலைவராக எம்.வி. மனோகரன் அண்மையில் தேர்வாகினர்.
இவர்களுடன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆர்.வி.உதயகுமார், எஸ்.மஞ்சுளா, டி.சுரேஷ்குப்தா, வி.அருள்ஜோதி,
டி.ஜெயக்குமார், டி.செல்வராஜ், கே.சந்திரசேகரன், புஷ்பவள்ளி, கலா,ஏ.வீரப்பன் கே.தாணுமூர்த்தி, கே.ராமு, டி.அருள்வேல் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இத்தேர்தலை கூட்டுறவு சார்பதிவாளர் கருணாகரன் நடத்தினார். கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குநர் வ.குணசேகரன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.