ஸ்ரீரங்கம் பகுதியில் தனியாக நடந்து செல்லும் வயதான பெண்களைக் குறிவைத்து, அவர்களிடம் நகைபறிக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.
ஸ்ரீரங்கம் காவல் சரகத்துக்கள்பட்ட பகுதிகளில் கடைவீதி உள்ளிட்டவற்றுக்கு வயதான பெண்கள் செல்லும் போது, மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வரும் நபர்கள் நகையைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் கடந்த மாதத்தில் நிகழ்ந்தன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சித்ரா (54), கடைவீதிக்குச் சென்று விட்டு பழைய மின் அலுவலகம் அருகிலுள்ள வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருடர்கள், சித்ரா அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்தனர். எனினும் சித்ரா நகையை இறுக பற்றிக் கொண்டதால் பாதி சங்கிலியை மட்டுமே திருடர்கள் பறித்துச் சென்றனர். எனவே நகைபறிப்பில் ஈடுபடுவோரை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.