குடிமைப்பணி போட்டித் தேர்வுக்குப் பயிற்சி

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.


 மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவம், வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளத்திலிருந்து 
 கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர, விண்ணப்பப் படிவங்களை திருச்சி மண்டல மீன்வளத் துணை இயக்குநர், மீன்வள உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலைநாள்களில் நேரில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com