திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நூற்றாண்டு தொடக்கவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு திருக்குறள் சு. முருகானந்தம் தலைமை வகித்தார். தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத் துறைத் தலைவர் சூசை கூட்டத்தில் பங்கேற்று, கழகத்தின் பதிப்புப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
நூற்றாண்டு விழாவையொட்டி சைவ சித்தாந்த கழகத்தின் நூல்கள் அனைத்தும் 25 சதவிகித கழிவில் 30 நாள்களுக்கு விற்பனை செய்வது, கல்லூரி மாணவர்களின் சங்க இலக்கியம் மற்றும் தமிழ் இலக்கிய நூல்களை ஒரு ஆண்டுக்கு விற்பனை நிலையத்தில் நேரில் காண கண்காட்சி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு கல்லூரிப் பேராசிரியர்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.