திருச்சியில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி ஜோசப் கண்மருத்துவமனை, ரோட்டரி கிளப், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அபிராமி ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை இணைந்து, பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள போக்குவரத்து விழிப்புணர்வுப் பூங்காவில் பேரணியை நடத்தின.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் டாக்டர் ஜமீர்பாஷா பேரணியைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
போக்குவரத்து காவல் உதவி ஆணையர் அருணாச்சலம், ஜோசப் கண் மருத்துவமனை இணை இயக்குநர் பிரதீபா, அகிலன், வருண்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.பேரணியில் மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்று,வாகனஓட்டிகள், பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம், விபத்துகளைத் தவிர்த்தல், போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.மாநகரப் பகுதிகள் வழியாக வந்த பேரணி தென்னூர் உழவர்சந்தை அருகே அனைத்து மகளிர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜம்பகா ராமகிருஷ்ணன் நிறைவு செய்து வைத்தார்.