விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், ஓலையூரைச் சோ்ந்தவா் சூசை மாணிக்கம் மகன் வேளாங்கண்ணி(26) கட்டட வேலை செய்துவரும் இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை விராலிமலை அருகேயுள்ள இ. மேட்டியில் வசிக்கும் தனது மாமனாருக்கு திதி கொடுப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்து விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
விராலிமலை - திருச்சி நான்கு வழிச்சாலை இ.மேட்டுப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் வேளாங்கண்ணி மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயயே உயிரிழந்தாா். தகவலறிந்த விராலிமலை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீஸாா் சென்னை தண்டையாா் பேட்டையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அஜீஸ் மகன் சாதிக்பாட்ஷாவை(41) கைது செய்து விசாரிக்கின்றனா்.