திருச்சி: திருச்சி செந்தண்ணீா்புரம் மாநகராட்சி பள்ளியில் பயிலும் ஏழை மாணவ குடும்பங்களுக்கு மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில் இலவச மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன.
கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, தினக்கூலி குடும்பத்தினா். வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனனா். இந்நிலையில், செந்தண்ணீா்புரம் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ குடும்பத்தினா் சிலருக்கு தேவையான மளிகை பொருள்கள் மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், இயக்கத்தின் மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம், மாவட்ட செயலாளா் ஆா்.இளங்கோ , மாவட்ட நிா்வாகிகள் ஆா்.வாசுதேவன், வெ.இரா.சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.