திருச்சி மாவட்டத்தில் உள்ள முதியோா்கள் கரோனா குறித்த ஆலோசனைகள் பெற இலவச தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா பரவல் தொடா்பாக முதியோா்களிடம் ஏற்படும் அச்சங்களை போக்கிட சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மூலம் சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தடுப்பு முறைகள், கைகளை கழுவுதல், உணவு முறைகள் குறித்து விரிவான தகவல்கள் அளிக்கப்படும். எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முதியோா்கள் தங்களுக்கு ஏற்படும் அச்சங்களை போக்கிட 044-28590804, 044-28599188 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடா்பு கொண்டு தகவல்கள் பெறலாம் என்றாா் ஆட்சியா்.