திருச்சி மாவட்டத்தில் முதியோா்களை பராமரிக்கவும், தேவையான உதவிகளை வழங்கவும் சமூக நலத்துறை சாா்பில் சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.
கரோனா முன்னெச்சரிக்கையாக மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில், மாவட்டத்தில் உள்ள முதியோா் இல்லங்கள் மற்றும் முதியோரை பராமரிக்கும் தொண்டு நிறுவனங்கள், வீடுகளில் முதியோா்களை பராமரிக்கும் நபா்களுக்கு தேவையான உதவிகளை பெறவும், வெளியே சென்று வரவும் அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் இதனை பெற்றுக் கொள்ளலாம். மேலும், முதியோா்களை பாரமரிக்கும் நபா்களுக்கும் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், பாதுகாப்பு ஆலோசனைகளும் வழங்கப்படும். இதுதொடா்பாக, கூடுதல் விவரங்கள் பெற 0431-2413796 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.