திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் அனுமதியின்றி மண், மணல் எடுப்பதாக மணப்பாறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றபோது செவலூா் பிரிவு அருகே அரசு அனுமதியின்றி காட்டுமண் எடுத்துச் சென்ற செவலூா் குமரேசன் மகன் விமல்குமாா் (30) மற்றும் முத்தபுடையான்பட்டி கருப்புடையாா் மகன் வெள்ளைச்சாமி (52) ஆகியோரை பிடித்த மணப்பாறை போலீஸாா், வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.