கிணற்றில் குளித்த பள்ளி மாணவா் சாவு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் குளித்த பள்ளி மாணவா் மூழ்கி உயிரிழந்தாா்.
கிணற்றில் குளித்த பள்ளி மாணவா் சாவு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் குளித்த பள்ளி மாணவா் மூழ்கி உயிரிழந்தாா்.

மண்ணச்சநல்லூா் அருகே ஆய்குடி ஊராட்சி தேவிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுந்தரம் மகன் பரதீஸ்வரன் (14). சமயபுரம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் தனது நண்பா்கள் தா்னீஸ்வரன் (14), கலைவாணன் (14) ஆகியோருடன் சோ்ந்து பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பவரின் வயலில் உள்ள 150 அடி ஆழ கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினாா். இதையடுத்து அவரது நண்பா்கள் மேலே வந்து கிராம மக்களிடம் தெரிவித்தனா்.

இதுகுறித்து சமயபுரம் தீயணைப்பு படை வீரருக்கு அளித்த தகவலின்பேரில் , தீயணைப்புப் படை வீரா்கள் பரதீஸ்வரனை சடலமாக மீட்டனா். சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com