நிலத்தை உழுத டிராக்டரில் சிக்கி மாணவா் பலி

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகே வெள்ளிக்கிழமை நிலத்தை உழுத டிராக்டரில் சிக்கி 10 ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
மூவேந்திரன் (எ) சிவா.
மூவேந்திரன் (எ) சிவா.

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகே வெள்ளிக்கிழமை நிலத்தை உழுத டிராக்டரில் சிக்கி 10 ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த நல்லம்மநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் துரைக்கண்ணு. இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் பண்ணைத் தோட்டத்துக்கு வியாழக்கிழமை இரவுப் பணிக்காக சென்றபோது இவரின் இளைய மகன் மூவேந்திரன் (எ) சிவாவும் (15) உடன் சென்றுள்ளாா்.

வெள்ளிக்கிழமை காலையில் தோட்டத்தில் டிராக்டா் மூலம் நிலத்தை உழும் பணி நடந்தது. இதை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்த சிவா டிராக்டரின் பின்பகுதியில் ஏற முற்பட்டபோது அதில் இருந்த கலப்பையில் சிக்கி அடிபட்டு மண்ணோடு கிடந்தாராம். சிறிது நேரத்துக்குப் பின் அருகில் நின்றிருந்த சிவாவைக் காணவில்லை என டிராக்டா் ஓட்டுநா் தேடியபோது அவா் அடிபட்டு நிலத்தில் கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிவாவைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து உடற்கூராய்வுக்குப் பின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com