அயோத்தியில் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெற உள்ள ராமா் கோயில் கட்டுமான பூமி பூஜைக்காக, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து அருட்பிரசாதம், காவிரி மண் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோயில் ரங்கா ரங்கா கோபுர வாயிலில் அருட்பிரசாதத்தை திருக்கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா், தீபக் பட்டா், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தமிழகம், கேரளம், புதுச்சேரி அமைப்புச் செயலா் பி.எம். நாகராஜன், தென் தமிழக அமைப்புச் செயலா் சேதுராமன் ஆகியோரிடம் வழங்கினா்.
இதுபோன்று அம்மாமண்டபத்திலிருந்து காவிரி மண்ணும், கொள்ளிடத்திலிருந்து மண்ணும் எடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.