திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றிய பகுதி அதிமுகவினருடன் அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்பியுமான ப. குமாா் புதன்கிழமை கட்சி சாா்பான சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்தினாா்.
மருங்காபுரி ஒன்றிய ஊத்துக்குழி, வேம்பனூா், ஊனையூா், தேனூா் மற்றும் வளநாடு ஆகிய பகுதிகளில் நடந்த சுற்றுப்பயணத்தில் எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் தலைமையில், ஒன்றியச் செயலா்கள் என். சேது, எம்.பி. வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலையில் புதிதாக பதவியேற்றுள்ள பா. குமாா், ஊராட்சிகளில் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து கட்சியின் வெற்றி குறித்து ஆலோசனை வழங்கினாா்.
முன்னாள் எம்எல்ஏ சி. சின்னசாமி, மாவட்டச் துணைச் செயலா் எம்.ஆா். ராஜ்மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் வளநாடு ஊராட்சி தலைவா் வெங்கடேசன் மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.