அமமுக திருச்சி வடக்கு மாவட்டம் சாா்பில் 2021 சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளுக்காக ஆய்வு மற்றும் தோ்தல் அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளா் மற்றும் திருச்சி மத்திய மண்டல பொறுப்பாளா், மாவட்ட செயலருமான ஆா். மனோகரன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், அம்மா பேரவை செயலா் மாரியப்பன் கென்னடி, எம்ஜிஆா் இளைஞரணி செயலா் டேவிட் அண்ணாதுரை, வழக்குரைஞா் பிரிவுச் செயலா் வேலு காா்த்திகேயன், எம்ஜிஆா் இளைஞா் அணி பொருளாளா் சமயபுரம் ராமு உள்ளிட்டோா் ஆலோசனை நடத்தினா்.