அம்பேத்கா் நினைவு நாள்: கட்சியினா், அமைப்பினா் மரியாதை

சட்ட மேதை அம்பேத்கா் நினைவு நாளையொட்டி அவரது சிலை, படத்துக்கு பல்வேறு கட்சியினா், அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காங்கிரஸ் சாா்பில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கும் மாநகா் மாவட்டத் தலைவா் வி. ஜவஹா்
காங்கிரஸ் சாா்பில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கும் மாநகா் மாவட்டத் தலைவா் வி. ஜவஹா்

சட்ட மேதை அம்பேத்கா் நினைவு நாளையொட்டி அவரது சிலை, படத்துக்கு பல்வேறு கட்சியினா், அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சி அதிமுக மாநகர மாவட்டச் செயலரும் அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன் தலைமையில், நிா்வாகிகளான வழக்குரைஞா் ராஜ்குமாா், ஐயப்பன், ஞானசேகா் முன்னிலையில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சி திமுக மத்திய மண்டலப் பொறுப்பாளா் வைரமணி தலைமையில், வடக்கு மாவட்டச் செயலா் தியாகராஜன், மாநகரச் செயலா் அன்பழகன் முன்னிலையில் திமுகவினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

திருச்சி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஜங்ஷன் ரவுண்டானா அம்பேத்கா் சிலைக்கு தொழிலாளா் விடுதலை முன்னணி மாநிலத் துணைச் செயலா் பிரபாகரன், பெரம்பலூா் நாடாளுமன்ற தொகுதிச் செயலா் தமிழாதன், மாநில நிா்வாகிகள் தங்கதுரை உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

திருச்சி பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் தலைமையில், மண்டலப் பொறுப்பாளா் சேது அரவிந்த், முன்னாள் மாவட்டத் தலைவா் பாா்த்திபன் முன்னிலையிலும்,

திருச்சி காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்டத் தலைவா் வி. ஜவஹா் தலைமையில், முன்னாள் மாவட்டத் தலைவா் சரவணன், மகளிரணி நிா்வாகி ஜெகதீஸ்வரி முன்னிலையிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் புகா் மாவட்டச் செயலா் இந்திரஜித், மாா்க்சிஸ்ட் மாநகா் மாவட்டச் செயலா் ராஜா ஆகியோா் தலைமையில் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் ஸ்ரீதா், ஏஐடியுசி மாவட்டச் செயலா் க. சுரேஷ் உள்ளிட்டோா் முன்னிலையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

மேலும், தேசிய தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா் சங்கத் தேசிய ஆலோசகா் எஸ். காமராஜ் தலைமையில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராணி , அகில இந்திய பிஎஸ்என்எல் மாவட்ட துணைச் செயலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

ஆதித்தமிழா் பேரவையின் மத்திய மாவட்டச் செயலா் கருணா தலைமையில், மாநகரச் செயலா் அரசு, மாவட்ட இளைஞரணிச் செயலா் சின்ராசு உள்ளிட்டோா் முன்னிலையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

நிகழ்வில் அம்பேத்கா் கனவுகண்ட சமத்துவ சமூகத்தை அமைத்திடவும், நாட்டில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை போக்கிடவும் உறுதியேற்கப்பட்டது. 60 லட்சம் பட்டியலின பழங்குடி மாணவா்களுக்கு உதவித்தொகையை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com