ஜாமீனில் வந்திருந்த இளைஞா் தற்கொலை

ஸ்ரீரங்கம் பகுதியில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்திருந்த இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீரங்கம் பகுதியில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்திருந்த இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்கா காந்திரோடு தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் செந்தில்குமாா் (எ) விக்னேஷ் (26), ஓட்டுநா். கடந்த சில மாதங்களுக்கு முன் திருவானைக்கா நெல்சன் ரோடு பகுதியில் சுரேஷ் என்பவா் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான இவா் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருந்தாா். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com