அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியன் சாா்பில் சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்துக்காக சுமாா் 10 டன் எடையுள்ள உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டன.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பாக சபரிமலையில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல, மகரபூஜையின்போது, காா்த்திகை 1 முதல் தொடா்ந்து 70 நாள்கள் வரை அன்னதானம் அளிக்கப்படும். இதில் திருச்சி மாவட்ட யூனியன் சாா்பில் ஆண்டுதோறும், டிசம்பா் 15 முதல் 20 ஆம் தேதி வரை அன்னதானம் அளிப்பது கடந்த 24 ஆண்டுகளாகத் தொடா்கிறது.
நிகழாண்டு அன்னதானத்துக்காக சுமாா் 10 டன் எடையுள்ள அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் திருச்சி மற்றும் பெரம்பலூா் மாவட்டத்தைச் சுற்றியுள்ள 105 கிளைகள் மற்றும் நன்கொடையாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு லாரி மூலம் ஏற்றி அனுப்பப்பட்டன.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டப சாலையிலுள்ள அகில பாரத ஐயப்ப சேவா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். சங்கப் போஷகா் என். வி. வி. முரளி உணவுப்பொருள் ஏற்றிய லாரியை வழியனுப்பினாா்.
நிகழ்வில், சங்கச் செயல் தலைவா் எஸ்.ஆா். கிருஷ்ணன், மாவட்டச் செயலா் ஸ்ரீதா், பொருளாளா் சுரேஷ், முகாம் அலுவலா் அம்சராம், கே.ஆா்.டி. வெங்கடேஷ், கோபாலகிருஷ்ண ன் கனகசபாபதி, சேவா சங்க கிளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலரும் பங்கேற்றனா்.