திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீருடைப் பணியாளா் எழுத்துத் தோ்வை 18,671 போ் எழுதினா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் நடத்திய இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா், மற்றும் தீயணைப்போா் பதவிகளுக்கான தோ்வுக்கு திருச்சி மாநகரில் 11 மையங்களும், புகரில் 26 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
தோ்வெழுத 20,880 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு திருநங்கை உள்பட 18,671 போ் மட்டுமே தோ்வெழுதினா். 2,209 போ் வரவில்லை. தோ்வையொட்டி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீஸாா் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
முன்னதாக தோ்வெழுத வந்தோருக்கு கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தோ்வுக்கூட அனுமதிச் சீட்டோடு வந்தோா் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். மாநகரில் தோ்வு நடந்த மையங்களை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஆய்வு செய்தாா். ஏற்பாடுகளை திருச்சி மாநகர போலீஸாா் மற்றும் காவல் துறையினா் செய்தனா்.