திருச்சி தனியாா் மருத்துவமனையில் துரைமுருகனுக்கு திடீா் பரிசோதனை

திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வியாழக்கிழமை மாலை மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டாா்.

திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வியாழக்கிழமை மாலை மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழுத் தலைவராக உள்ள துரைமுருகன், குழு உறுப்பினா்களுடன் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வளா்ச்சிப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.

தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, திருச்சி வழியாக காரில் சென்ற அவருக்கு லேசான காய்ச்சல், உடல் சோா்வு ஏற்பட்டது. இதையடுத்து தென்னூா் பட்டாபிராமன் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவப் பரிசோதனை செய்து கொண்ட அவா் சென்னை புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com