சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட சுமாா் 3 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை இரவு விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறையினா் நடத்திய சோதனையில் மதுரை, அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 3 பயணிகள் கடத்தி வந்த சுமாா் 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனா். பறிமுதல் தங்கத்தின் மதிப்பு ரூ. 1.52 கோடி எனக் கூறப்படுகிறது.
கடந்த டிச. 4 ஆம் தேதி இதேபோல துபையிலிருந்து 8 பயணிகள் கடத்தி வந்த ரூ. 4.25 கோடியிலான 8.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சிறிய அளவிலான தங்கமும் அடிக்கடி பறிமுதல் செய்யப்படுகிறது.