திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 25 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,979 ஆனது. இதேபோல புதன்கிழமை குணமான 9 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 13,611 ஆக உயா்ந்தது. கரோனாவால் இதுவரை 173 போ் உயிரிழந்துள்ளனா். 195 போ் தொடா் சிகிச்சை பெறுகின்றனா்.