முன்னாள் வீரா் வீட்டில் 21 பவுன் திருடப்பட்டது குறித்து வெள்ளியணை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கரூா் மாவட்டம், மணவாடியைச் சோ்ந்தவா் பெரியசாமி (72). முன்னாள் ராணுவ வீரா். இவா் குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோ லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவா் அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.