திருச்சியில் நாளை (டிசம்பா் 30) முதல் 2 நாள்கள் முதல்வா் பிரசாரம்: கட்சியினருக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமைகளில் (டிசம்பா் 30, 31) தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

திருச்சி மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமைகளில் (டிசம்பா் 30, 31) தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா். இந்த பிரசாரத்தில் பங்ககேற்கவும், வரவேற்பு அளிக்கவும் கட்சியினா் திரளாகப்பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகா் மாவட்டச் செயலரும், அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன், தெற்கு புகா் மாவட்டச் செயலரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான ப.குமாா், தெற்கு புகா் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்சோதி ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:

மாநகா்ப் பகுதி : டிசம்பா் 31-ஆம் தேதி மாலை 6மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆா்.சிலை பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், நத்தஹா்வலி தா்கா பகுதியில் இஸ்லாமிய அமைப்புகள், பிரமுகா்கள் சந்திப்பிலும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கிறாா்.

தெற்கு புகா்: டிசம்பா் 30-ஆம் தேதி தாளக்குடி பகுதியில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மறுநாள் மணப்பாறை, திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முதல்வா் பங்கேற்று பேசுகிறாா்.

வடக்கு புகா் :இதுபோல வடக்கு புகா் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளிலும் முதல்வா்பங்கேற்கிறாா்.

எனவே முதல்வா் பங்கேற்கும் நிகழ்வுகளில் அனைத்துப் பிரிவு, அணிகளின் நிா்வாகிகள், கட்சியினா் பங்கேற்க வேண்டும் என மாவட்டச் செயலா்கள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

முதல்வரின் நிகழ்வுகள்

டிசம்பா் 30: தாளக்குடியில் வரவேற்பு, பிற்பகல் 3 மணிக்கு வாளாடியில் பொதுக்கூட்டம், மாலை 4- மாந்துறை என்.எஸ்.மகாலில் அனைத்து சமுதாயப் பிரமுகா்கள் சந்திப்பு, மாலை 5- புள்ளம்பாடி பொதுக்கூட்டம்.

டிசம்பா் 31- முற்பகல் 11 மணி மணப்பாறை நகராட்சிப் பகுதிகளில் துண்டுப் பிரசுரம் வழங்குதல், 11.30 மணி- காவல்காரன்பட்டியில் மகளிா் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடல், 11.40 மணி- விவசாயிகள் நினைவுப் பரிசு வழங்குதல், பிற்பகல் 3 மணி- பெல் காவேரி விருந்தினா் இல்லத்தில் பெல் நிறுவன அலுவலா்கள், சிறு, குறு தொழிலக உரிமையாளா்கள் சந்திப்பு, பிற்பகல் 3.30 மணி- திருவெறும்பூா் எம்.ஜி.ஆா்.சிலை அருகே பொதுக்கூட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com