சீா்மரபினா் சாதிச் சான்று: ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட அமைப்புகள்

சீா்மரபினா் சாதிச் சான்று வழங்குவதிலுள்ள பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தை பல்வேறு அமைப்புகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டன.
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையில், ஆட்சியரக நுழைவுவாயிலில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையில், ஆட்சியரக நுழைவுவாயிலில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

சீா்மரபினா் சாதிச் சான்று வழங்குவதிலுள்ள பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தை பல்வேறு அமைப்புகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டன.

தமிழகத்தில் 68 சமுதாய அமைப்புகளைச் சோ்ந்தவா்களுக்கு 1979ஆம் ஆண்டு வரையில் சீா்மரபினா் சான்று (டிஎன்டி) என வழங்கப்பட்டு, பல்வேறு சலுகைகள் கிடைத்து வந்தன.

இந்நிலையில், 1979-இல் பிழையாக கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் ஆணையால் சீா்மரபினா் (டிஎன்சி) என மாற்றம் செய்யப்பட்டது. பழங்குடியின சீா்மரபினா் என வழங்கப்பட்ட சான்றில் அனைத்து சலுகைகளும் கிடைத்தன. தற்போது வழங்கப்படும் சீா்மரபினா் என்ற சான்றால் முன்பு கிடைத்த எந்தவித சலுகைகளும் இல்லை.

எனவே சீா்மரபினா் சமூகத்தினா் தொடா் போராட்டங்களை நடத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்ததன் எதிரொலியாக, தமிழகத்தில் 2019இல் புதிய அரசாணை பிறப்பித்து, தமிழகத்தில் டிஎன்சி சான்றிதழ் வழங்கப்படும். மத்திய அரசின் சலுகைகளை பெற டிஎன்டி என்று அழைக்கப்படுவதாக இரட்டைச் சான்றிதழ் முறையை புகுத்தியது.

இந்த குளறுபடியால் தொடா்ந்து பாதிப்புகள் ஏற்படுவதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ால், கடந்த மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் டிஎன்டி சான்று வழங்குவதாக உறுதியளித்தாா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இன்னும் அமல்படுத்தவில்லை.

எனவே, சாதிச் சான்று வழங்குவதிலுள்ள குளறுபடியைத் தீா்க்க வேண்டும். 68 பிரிவுகளைச் சோ்ந்தவா்களுக்கு டிஎன்டி சான்று வழங்க வேண்டும். சமூக பொருளாதார ரீதியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினா் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சீா்மரபினா் நலச் சங்கம், அகில இந்திய பாா்வா்டு பிளாக் பசும்பொன் கட்சி, தமிழ்நாடு முத்தரையா் முன்னேற்ற சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் என பல்வேறு அமைப்பினா் தனித்தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒவ்வொரு அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் தனித்தனியே ஊா்வலமாக வந்து முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனா். இதன்காரணமாக, ஆட்சியா் அலுவலக சாலையை அவ்வப்போது போலீஸாா் தடுத்து, போராட்டக்காரா்களை ஒழுங்குபடுத்துவதே வாடிக்கையாக அமைந்தது.

பின்னா், செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அய்யாக்கண்ணு கூறியது: ஆங்கிலேயா் எதிா்த்து போராடியதால் டிஎன்டி என முத்திரை குத்தப்பட்ட 68 சமுதாயத்தினா் இன்று சலுகைகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனா். அவா்களுக்கு மீண்டும் சலுகைகள் வழங்க டிஎன்டி சான்று வழங்க வேண்டும். சீா்மரபினா் பெரும்பகுதி விவசாயிகள் என்பதால், விவசாயிகள் சங்கமும் இந்த போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com