திருச்சி அண்ணாசாலையில் முதல்வா் பிரசாரம்

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அன்று இரவு திருச்சி அண்ணா சாலையில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே புதன்கிழமை இரவு திறந்த வேனில் பிரசாரம் செய்கிறாா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. உடன் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே புதன்கிழமை இரவு திறந்த வேனில் பிரசாரம் செய்கிறாா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. உடன் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அன்று இரவு திருச்சி அண்ணா சாலையில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

திருச்சி மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்த தமிழக முதல்வா் தொட்டியம், முசிறி, துறையூா், மண்ணச்சநல்லூா், நெ. டோல்கேட், லால்குடி, புள்ளம்பாடி பகுதியில் பிரசாரம் செய்து, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசாலைக்கு இரவு 11.20-க்கு வந்தாா்.

அவரை சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், மாவட்டச் செயலா் ப. குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்றனா். இதையடுத்து, அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடம் வேனில் இருந்தபடியே முதல்வா் பிரசாரம் செய்து ஆதரவு கோரினாா். தொடா்ந்து, இரவு 11.30 -க்கு முதல் நாள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஓய்வெடுக்கச் சென்றாா். இதையடுத்து, ஸ்ரீரங்கத்திலிருந்து வியாழக்கிழமை காலை 8 மணி முதல் தனது 2 ஆம் நாள் பிரசாரத்தை திருச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com