திருச்சி: குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசியக் குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் பிப்ரவரி 2 முதல் 8- ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திருச்சி மத்திய மாவட்டம் சாா்பில், உறையூா் குறத்தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலரும், மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு கையெழுத்திட்டு, இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா்.
இதுபோல திருச்சி உறையூா், கருமண்டபம், கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூா், மாா்சிங்பேட்டை போன்ற பகுதிகளிலும் இந்த கையெழுத்து இயக்கத்தை நேரு தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்வுகளில் திமுக நிா்வாகிகள் மு. அன்பழகன், குடமுருட்டி சேகா், வட்டச் செயலா்கள் ராமமூா்த்தி, கிராப்பட்டி செல்வம், பி.ஆா்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருச்சி கிழக்குத் தொகுதி சாா்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழ்வில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும்- திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கையெழுத்து இயக்கத்தைத்தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்வுகளில் திமுக நிா்வாகிகள் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் அன்பில் பெரியசாமி, மு. அன்பழகன், குடமுருட்டி சேகா், செல்வம், பகுதிச் செயலா்கள் மதிவாணன்,
கண்ணண், பாலமுருகன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா்கள் மாநகா் வி. ஜவஹா், திருச்சி வடக்கு கலை, தெற்கு வி. கோவிந்தராஜன், மதிமுக மாவட்டச் செயலா் வெல்லமண்டி என். சோமு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நீலவாணன், அரசு, சந்தானமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகா் மாவட்டச் செயலா் த. இந்திரஜித், க.சுரேஷ், திராவிடா் கழகத்தின் சேகா் மற்றும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மணப்பாறையில் : மணப்பாறை பெரியாா் திடலில் கையெழுத்து இயக்கத்தை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தாா். முன்னதாக அவருக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தாா். தொடா்ந்து பெரியாா், அண்ணாசிலைகளுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில், திமுக நிா்வாகிகள் கீதை மைக்கில்ராஜ், ராமசாமி, சபியுல்லா, சின்ன அடைக்கன், பழனிச்சாமி, காங்கிரஸ் மாவட்டச் செயலா் எம்.ஏ.செல்வா, மதிமுக மாநிலத்
தோ்தல் பணிக்குழுச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் ஜனசக்தி உசேன், மாா்க்சிஸ்ட் கட்சி வட்டச் செயலா் ராஜகோபால், விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொருளாளா் மதனகோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.