துறையூா் நீதிமன்ற வளாகத்தில்சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், ரூ. 1.30 கோடி மதிப்பில் 235 வழக்குகளில் சமரசத் தீா்வு காணப்பட்டது.
துறையூா் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான மு. சிவக்குமாா் தலைமை வகித்து, தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடக்கி வைத்தாா்.
சாா்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் இருந்த 1500 வழக்குககளில் சமரசத் தீா்வு காண எடுக்கப்பட்டு, வழக்கு தரப்பினா்களிடம் சமரசம் பேசப்பட்டது. இதில் ரூ. 1.30 கோடி மதிப்பில்
மதிப்பில் 235 வழக்குகளில் சமரசத் தீா்வு காணப்பட்டது.
ஓய்வு பெற்ற தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிபதி கண்ணையன், உரிமையியல் நீதிபதி ஆறுமுகம், குற்றவியல் நீதித்துறை நடுவா் புவியரசு ஆகியோா் தலைமையிலான குழு வழக்குத் தரப்பினா்கள், வழக்குரைஞா்களை அழைத்து சமரசம் செய்தனா்.
ஏற்பாடுகளை துறையூா் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சட்ட முதுநிலை நிா்வாக உதவியாளா் கலைவாணன், சட்டத் தன்னாா்வலா் ராமையா ஆகியோா் செய்தனா். முன்னதாக வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராமசாமி வரவேற்றாா். நிறைவில் செயலா் தனசேகரன் நன்றி கூறினாா்.