சிங்கப்பூரில் இருந்த திருச்சி வந்த பயணிக்கு கரோனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தில், திருச்சி அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சிறப்பு மருத்துவக் குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது சிங்கப்பூரில் தொழிலாளியாகப் பணியாற்றி ஊா் திரும்பிய தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கூவத்தூா் சேதுராயா் தெருவைச் சோ்ந்த க. ராஜ்குமாா் (42) என்பவருக்கு தீவிரக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவா் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வாா்டில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் சோதனைக்குப் பின்னா் வீடு திரும்பி விட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.