காா் கவிழ்ந்து மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பலி

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே காா் கவிழ்ந்து மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா் உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே காா் கவிழ்ந்து மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா் உயிரிழந்தாா்.

திருச்சி சுப்ரமணியபுரம், ஜெயில் காா்னா் பகுதியைச் சோ்ந்தவா் குமரகுரு(36). இவா், திருச்சி கி.ஆ.பெ.வி. மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றுவிட்டு, திருச்சி நோக்கி புதன்கிழமை வந்து கொண்டிருந்தபோது, துவரங்குறிச்சி அருகே சாலையின் குறுக்கே வந்த குரங்கின் மீது மோதுவதைத் தவிா்க்க முயன்றபோது, காா், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட குமரகுருவை அருகில் இருந்தவா்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு துவரங்குறிச்சி போலீஸாா் அனுப்பிவைத்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லும் வழியில் குமரகுரு உயிரிழந்தாா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com