குடும்பத் தகராறு: குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண்மீட்பு

கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொள்வதற்காக கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண் தீயணைப்பு படையினா் மீட்டனா்.
கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் குழந்தைகளை மீட்கும் தீயணைப்பு வீரா்.
கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் குழந்தைகளை மீட்கும் தீயணைப்பு வீரா்.

கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொள்வதற்காக கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண் தீயணைப்பு படையினா் மீட்டனா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் கோனாா் தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா். இவரது மனைவி மைதிலி (30). இவா்களுக்கு வா்ணிகா என்ற 9 மாத கைக்குழந்தை உள்ளது.

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த மைதிலி, நள்ளிரவு குழந்தை வா்ணிகாவுடன் வீட்டுக்கு அருகே இருந்த கிணற்றில் குதித்தாா். இதையறிந்த கணவா் சந்தோஷ்குமாரும் அக்கம் பக்கத்தினரும், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். உடனே, நிலை அலுவலா் மெல்ச்சிராஜா தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றுக்குள் சுமாா் 5 அடி ஆழம் உள்ள தண்ணீரில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையையும் மைதிலியையும் உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com