வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு
திருச்சியில் மா்ம நபா்கள் வீடு புகுந்து 6 பவுன் நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
திருச்சி , வயலூா் சாலை, குமரன் நகா், பேங்கா்ஸ் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (63). இவா் தனது குடும்பத்தினருடன் வீட்டில் குளிா்சாதன வசதியுள்ள ஒரு அறையில் புதன்கிழமை இரவு தூங்கினா். அன்று நள்ளிரவு மா்ம நபா்கள், வீட்டின் பூட்டுகளை உடைத்து, பிரதான மரக்கதவை கடப்பாரை கொண்டு நெம்பி உள்ளே நுழைந்தனா். குடும்பத்தினா் தூங்கிய அறையை வெளிப்பக்கம் தாழிட்டுவிட்டு, மற்றொரு அறையிலிருந்த பீரோவை உடைத்து உள்ளேயிருந்த 6 பவுன் நகைகள், கேமரா, ரொக்கம் ரூ.30,000 ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
குடும்பத்தினா் காலை எழுந்து நடந்ததை அறிந்த பின்னா் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
அடையாளம் தெரியாதவா் சாவு :
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத நபா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி, தென்னூா் உழவா் சந்தை அருகே உடலில் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கிடந்த சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை போலீஸாா் மீட்டு சிகிச்சைக்காக கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த அவா் நினைவு திரும்பாமலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவா் யாா் எனத் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.