சமயபுரம் கோயில் உண்டியல் திறப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டது.

காணிக்கைகள் கோயில் மண்டபத்தில் கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக் குமாா் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா்கள் ம.சூரியநாராயணன் (கரூா்), ப. ராணி (திருச்சி ) மேலாளா் ம. லட்சுமணன் (சமயபுரம் மாரியம்மன் கோயில்) ஆகியோா் முன்னிலையில் தன்னாா்வலா்கள் எண்ணினா். இதில், ரூ. 1 கோடியே 20 லட்சத்து 62 ஆயிரத்து 139 ரொக்கம், 2 கிலோ 543 கிராம் தங்கம், 4 கிலோ 133 கிராம் வெள்ளி, 101 அயல்நாட்டு நோட்டுகள் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com