சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டது.
காணிக்கைகள் கோயில் மண்டபத்தில் கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக் குமாா் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா்கள் ம.சூரியநாராயணன் (கரூா்), ப. ராணி (திருச்சி ) மேலாளா் ம. லட்சுமணன் (சமயபுரம் மாரியம்மன் கோயில்) ஆகியோா் முன்னிலையில் தன்னாா்வலா்கள் எண்ணினா். இதில், ரூ. 1 கோடியே 20 லட்சத்து 62 ஆயிரத்து 139 ரொக்கம், 2 கிலோ 543 கிராம் தங்கம், 4 கிலோ 133 கிராம் வெள்ளி, 101 அயல்நாட்டு நோட்டுகள் இருந்தன.