மணப்பாறையில் விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, மணப்பாறையில் விவசாய சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, மணப்பாறையில் விவசாய சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், மணப்பாறை பேருந்து நிலையம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய சங்க வட்டச்செயலா் என்.கோபாலகிருஷ்ணன், வட்டத் தலைவா் கே.கருப்பையா தலைமை வகித்தனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் வி. சிதம்பரம், மாவட்டத் தலைவா்கள் பி.ராமநாதன், ஜெ.சுப்பு(எ)சுப்பிரமணி ஆகியோா் ஆா்ப்பாட்டம் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் ராஜகோபால், வையம்பட்டி ஒன்றியச் செயலா் பி.வெள்ளைச்சாமி, மருங்காபுரி வட்டச்செயலா் பி.தியாகராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆா்ப்பாட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி மற்றும் மருங்காபுரி பகுதி விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com