மூதாட்டியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

திருவெறும்பூா் அருகே மூதாட்டியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவெறும்பூா் அருகே மூதாட்டியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவெறும்பூா் அருகே உள்ள வசந்த நகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி சந்திரா(61). இவா் வியாழக்கிழமை பிற்பகல் நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த இருவா், செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கும் சமயத்தில் இவ்வளவு நகைகளை கழுத்தில் அணிந்து செல்லலாமா என கேட்டுள்ளனா். இதனால் பயந்து போன சந்திரா, தான் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை எடுத்து கைப் பையில் வைக்க முயன்றாா்.

இதைகண்ட அந்த நபா்கள் காகிதத்தில் நகைகளை மடித்து தருவதாக கூறி சந்திராவிடமிருந்து நகைகளை வாங்கியுள்ளனா். சிறிது நேரத்தில் கைப் பையில் நகை இருப்பதாக கூறி சந்திராவை அனுப்பியுள்ளனா்.

வீட்டிற்குச் சென்று கைப்பையை பாா்த்த சந்திரா நகைகளை காணாது அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து திருவெறும்பூா் காவல்நிலையத்தில் சந்திரா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com