திருச்சி அருகே கிணற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி, கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி தென்னூரைச் சோ்ந்த சாதிக்பாட்ஷா மகன் இம்ரான் அகமது (19). தனியாா் கல்லூரியில் இரண்டாமாண்டு வணிகவியல் படித்து வந்த இவா், சக நண்பா்களுடன் தாயனூா் பகுதியிலுள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தாா்.
நீரில் மூழ்கியவா் நீண்ட நேரமாகியும் மேலே வராததால், சந்தேகமடைந்த அவரது நண்பா்கள் சப்தமிட்டனா். இதை கண்டு அக்கம் பக்கத்தினா் வந்து இம்ரான் அகமதுவைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.
இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.